1,660 கோடி ஒதுக்கீடு – ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது பாடசாலை மாணவர்களுக்ககான காலை உணவு வழங்கும் பிரதான நிகழ்வு – கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் உணவை வழங்க கல்வி அமைச்சர் சுசில் பணிப்பு!

Monday, March 25th, 2024

தரம் 01 முதல் தரம் 05 வரையுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இன்று (25)முதல் போஷாக்கான காலை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்கேற்புடன் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை உணவு வழங்கும் திட்டம் இன்று (25) நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் ஆரம்பமானது..

இந்நிகழ்வுக்கு இணையாக மாகாண மட்டங்களிலும் ஆரம்ப நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போஷாக்கு நிபுணர்கள் மற்றும் கல்வி அமைச்சின் பரிந்துரைகளை கருத்திற் கொண்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை இந்த காலை உணவை வழங்குமாறு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த பணிப்புரை விடுத்துள்ளார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, போஷாக்கு மிக்கதாகவும் சுகாதாரமானதாக உயர்மட்டத்தில் இருப்தை உறுதி செய்யுமாறும் கல்வி அமைச்சு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

ஆரோக்கியமான, சுறுசுறுப்பான தலைமுறை என்ற தொனிப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான உணவுத் திட்டம், மாணவர்களிடையே போஷாக்கின்மை பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் அன்றாட பாடசாலை வருகையை அதிகரிப்பது, சிறந்த உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்விக்கான சாதக நிலைகள் மற்றும் தேசி உணவு கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்கான நான்கு அடிப்படை நோக்கங்களை இது நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9,134 அரசாங்க பாடசாலைகளிலும், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கி இந்த ஆண்டு மாணவர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடையவுள்ளனர்.

இதற்கென ஒன்பது மாகாண சபைகளுக்கும் அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட ஏனைய அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் நேரடித் தலையீட்டின் ஊடாக அரசாங்கம் ஒருவேளை உணவுக்காக 85 ரூபாவை வழங்குகிறது. தற்போது நடைமுறையில் சந்தை விலை உயர்வுகளுடன் ஒப்பிட்டு, அந்தத தொகையை 110 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சத்துணவு திட்டத்துக்கு தேவையான உணவு வகைகளை தேசி வழங்குநர்களால் வழங்கப்படுவதுடன், நேரடி மற்றும் மறைமுகமான புதிய வேலை உருவாக்கம் மூலம் நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பங்களிப்பாகவும் இது அமைந்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான உணவுத் திட்டம் தொடர்பான அனைத்து நிதி நிர்வாகங்களும் வெளிப்படைத்தன்மை மற்றும் அறிக்கைகளுடன் பராமரிக்கும் பொறிமுறையும் நடைமுறையில் உள்ளது.

கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு கிளை இது தொடர்பான பணிகளை செயற்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: