148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு!

Friday, October 7th, 2022

148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சலகத்தால்  வருடாவருடம் முன்னெடுக்கப்படும்  இரத்ததான முகாம் இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட பிரதான அஞ்சலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது அதிகளவான அஞ்சலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்  தன்னார்வரீதியாக இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதி அஞ்லதிபதி நாயகம் திருமதி மதுமதி வசந்தகுமார்,  யாழ்ப்பாணம் பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அனுராத பெர்ணாண்டோ, யாழ் பிரதம அஞ்சலதிபர் .மணிவண்ணன் தபாலதிபர்கள், வடமாகாண சுங்க திணைக்கள அதிகாரிகள் அஞ்சலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அதிக இலங்கையர் வாய், கழுத்து சார்ந்த புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் - புற்றுநோய் ஒழிப்பு செயற்...
மட்டக்களப்பில் ஆகக்குறைந்த அளவிலானோரே தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளனர்: விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹே...
இவ்வாண்டு வீதி விபத்துகளில் 115 சிறுவர்கள் இறந்துள்ளனர் - போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு எச்சரி...