ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டம் நாளை யாழ்ப்பாணத்தில்!
Sunday, October 27th, 2019நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நளை திங்கட்கிழமை (28) யாழ்ப்பணத்தில் பெரும் எடுப்பில் நடத்தப்படவுள்ளது.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக பொதுஜன பெரமுன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் நாளையதினம் யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளனர்.
யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள இளங்கதிர் சனசமூக மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
அத்துடன் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கான பணியில் பொதுஜன பெரமுனவுக்கு வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றனர். இந்த பிரசார கூட்டத்தில் பல ஆயிரக்கணக்கான அக்கள் அணிதிரண்டு தமது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களுக்கு வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|