சுவரொட்டிகளை அகற்றுவதற்கு 45 மில்லியன் ஒதுக்கீடு – இலங்கை காவல்துறை!
Thursday, October 10th, 2019நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் காட்சிப்பொருட்களை அகற்ற 45 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்ய இலங்கை காவல்துறை தீர்மானித்துள்ளது.
காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர இதனை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
சுவரொட்டிகள் மற்றும் தேர்தல் பிரசாரப்பொருட்களை அகற்ற தற்காலிக அடிப்படையில் பணியாளர்கள் அமர்த்தப்படவுள்ளனர். இதன்படி 1405 பணியாளர்களை பணிகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில் இதுவரை வன்முறைகள் எவையும் பதிவாகவில்லை என்றும் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
Related posts:
புதிய மாணவர்களை தேசிய கல்வியற் கல்லூரிக்கு இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி 9 ஆம் திகதி வெளிவரும்!
ரஸ்யாவின் மூன்று அரச பல்கலைக்கழகங்கள் நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவு தவறு - இலங்கை மருத்துவ சபை அற...
பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரதமர் மஹிந்த ரா...
|
|