சட்டவிரோத சுவரொட்டிகளை நீக்க 1,045 பணியாளர்கள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
Wednesday, October 9th, 2019ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை நீக்கும் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையங்களில் 1,045 பணியாளர்களை இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை காட்சிப்படுத்துவோரை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பதாதைகள், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை நீக்குவதற்காக சுமார் 46 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
Related posts:
நிலங்களை விடுவிக்க துரித நடவடிக்கை - முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்!
இலங்கை மீனவர்களின் கைது நியாயமற்றது!
எபடீன் நீர்வீழ்ச்சி சுற்றுலா வலயமாகின்றது!
|
|