பயிர்செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் – விவசாயத்துறை அமைச்சர் சானக்க வக்கும்பர அறிவிப்பு!
Monday, May 9th, 2022பயிர்செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் சானக்க வக்கும்பர தெரிவித்துள்ளார்.
தற்போது வரையில் 3 மாவட்டங்களில் பயிர்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கைகள் அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஏனைய மாவட்டங்களினதும் தரவுகளை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிர்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு 2500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
10 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அதிபர்களிடம்!
புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோ அரிசியை 97 ரூபாவுக்கு வழங்க தீர்மானம் - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தான...
தடுப்பூசி செலுத்தாத சிறுவர்களை விற்பனை நிலையங்ளுக்கு அழைத்து செல்ல வேண்டாம் - பொது சுகாதார பரிசோதகர...
|
|