அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு – அகில இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பம்!

Wednesday, January 1st, 2025

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை அகில  இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேற்படி குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் நிலுவைத் தொகையை வைப்பிலிடவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை அகில இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதற்கான பயிற்சி கருத்தரங்குகள் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இடம்பெற்று வருகின்றது.

000

Related posts:


சமூகத்தின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு – 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் ...
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு - ...
நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு - கடந்த வாரம் 1,602 நோயாளர்கள் பதிவு என தேசிய டெங்கு கட்டுப்...