உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Friday, October 11th, 2019


சுற்றாடலை பாதுகாக்கும் உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படாது அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரத்திற்கு வருகின்ற தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (10) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சுற்றாடல் முன்னோடிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அணிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பில் அனைவர் மீதும் உள்ள பொறுப்பை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காடுகளை பாதுகாத்தல், மரம் நடுதல் மற்றும் சுற்றாடல் மீது கரிசனை கொள்ளுதல், மரம், செடிகொடிகள், உயிரினங்கள் உட்பட பூமித் தாயை நேசிப்பது, அதனை வளப்படுத்துவது மனிதர்கள் என்ற வகையில் எம்மீதுள்ள அடிப்படை பொறுப்பும் கடமையுமாகுமென்றும் தெரிவித்தார்.

அதேபோன்று தான் வாழும் சூழல், மரம், செடிகொடிகள் மற்றும் உயிரினங்களை பாதுகாப்பதற்கு பிள்ளைகளுக்கு சிறுபராயம் முதல் பயிற்றுவிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுற்றாடலை நேசிக்கும் தலைவர் என்ற வகையில் சுற்றாடலை பாதுகாப்பதற்காக தான் கடந்த 05 வருட காலப்பகுதியில் முக்கியமான பல பணிகளை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக வரலாற்றில் முதன் முறையாக முப்படையினரையும் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததையும் நினைவுகூர்ந்தார்.

Related posts: