இரண்டு கட்டங்களாக இடம்பெற உள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்!
Tuesday, December 3rd, 20192019ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 26ஆம் திகதி வரை முதலாம் கட்ட பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறவுள்ளன.
ஜனவரி மாதம் 17ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 26ஆம் திகதி வரை இரண்டாம் கட்ட பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள 47 பாடசாலைகள் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி மாதம் 3ஆம் திகதியும், ஏனைய பாடசாலைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதியும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Related posts:
இந்திய மருத்துவர்களை அழைக்க அரசு!
மீண்டும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் திறப்பு!
ரஷிய அதிபர் புதினை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியா மட்டும் சற்று நடுங்குக...
|
|