வேகமாக பரவிவரும் கொரோனா வைரசின் புதியமாறுபாடு – எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பு!

Monday, December 18th, 2023

கேரளாவில் கொரோனா வைரசின் புதியமாறுபாடு வேகமாக பரவிவருவதை தொடர்ந்து எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் மிகவேகமாக பரவும் இலகுவில் அடையாளம் காணமுடியாத கொரோனா வைரசின் புதிய மாறுபாடு பரவிவருவதை தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் பரவும் புதிய நோயினால் இலங்கைக்கு எப்போதும் ஆபத்து என்பதால் இலங்கை  எச்சரிக்கையுடன் உள்ளது என சுகாதார அமைச்சின் கொரோனா விவகாரங்களிற்கான ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

48 மணித்தியாலங்களிற்கு மேல் காய்ச்சல் உட்பட நோய் அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் வைத்திய உதவியை நாடவேண்டும்.

தொற்று பரவல் ஆபத்தை தவிர்ப்பதற்கான முகக்கவசங்களை முடிந்தளவு பயன்படுத்தவேண்டும் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: