அரச ஊழியர்களுக்காக புதிய நடைமுறை!
Friday, August 30th, 2019
எதிர்வரும் நாட்களில் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பற்றிக் துணியிலான ஆடைகள் அணிந்து கடமைக்கு செல்வதனை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் தயா கமகே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் இன்னமும் தயாரிக்கப்படவில்லை. ஆனாலும் எதிர்வரும் நாட்களில் அதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறியுள்ளார். பற்றிக் ஆடை துறையினை வளர்ச்சியடைய செய்வதற்காக இந்த நடவடிக்கை பாரிய உதவியாக இருக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நோபல் பரிசிற்கான பரிந்துரையில் ஜனாதிபதி!
யாழில் வாள் வெட்டுக் குழுவின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் - காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போத...
2024 ஆம் நிதிஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சான்றுரைத்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த...
|
|
|


