வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் விடுத்துள்ள காலக்கேடு!
Thursday, January 2nd, 2020
அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் ,இது வரையில் எத்தகைய தீர்வும் கிடைக்கப்பெறவில்லை என சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கலாநிதி என். எம்.பெரேரா நிலையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தும் இது வரையில் எத்தகைய தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே , இரண்டு வார காலத்திற்குள் தகுந்த தீர்வு இன்றேல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.
Related posts:
கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் தொடர்பில் முதற் கட்ட விசாரணைகள் ஆரம்பம்.!
இலங்கை வருவோருக்கு பொலிஸாரின் அறிவித்தல்!
விமானத்தில் 75 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கம் - சிவில் விமான போக்குவரத்து ஆணைக்...
|
|
|


