விமானத்தில் 75 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கம் – சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
Monday, October 11th, 2021இலங்கை வரும் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒக்டோபர் 7 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு விமானத்தில் முன்பு அதிகபட்சமாக 75 பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் அவர்களுக்கு ஏற்ற பயணிகளுடன் சேவையை முன்னெடுக்க முடியும் என கூறியுள்ளது.
சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தடுப்பூசி பெறாத பயணிகள் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேருந்து நிலையங்களின் சுகாதாரத் தன்மை தொடர்பில் முறைப்பாடுகள்!
விடைத்தாள் திருத்த கட்டணத்தில் மாற்றமில்லை - பரீட்சைகள் திணைக்களம்!
டீசல் வழங்கலில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை - தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை!
|
|