விமானத்தில் 75 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கம் – சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
Monday, October 11th, 2021
இலங்கை வரும் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒக்டோபர் 7 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு விமானத்தில் முன்பு அதிகபட்சமாக 75 பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் அவர்களுக்கு ஏற்ற பயணிகளுடன் சேவையை முன்னெடுக்க முடியும் என கூறியுள்ளது.
சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தடுப்பூசி பெறாத பயணிகள் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிட முடியாது - ஜனாதிபதி!
யாழ்ப்பாணத்தில் பெற்றோல் குண்டு தாக்குதல்: உணவகம் சேதம்!
போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்கான பொறிமுறையை பலப்படுத்த நடவடிக்கை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரி...
|
|
|


