மீண்டும் தாக்குதல் நடைபெறலாம் – பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை!
Monday, April 29th, 2019தீவிரவாதிகளினால் மற்றுமொரு தாக்குதல் மேற்கொள்ள கூடும் என பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாதுக்க பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் பாதுகாப்பு பிரிவிடம் குறிப்பிட்டுள்ளார். பிரபுக்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பினை தீவிரப்படுத்துமாறு புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நாட்களில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்குமாறு அமெரிக்க தூதரகத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு - கிழக்கை இணைக்கும் எந்தக்கோரிக்கையும் இல்லை!
வைத்தியர்களின் பயண கொடுப்பனவை அதிகரிக்க அனுமதி!
கொவிட் பரவல் முற்றாக நீக்கவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்து தமது நாளாந்த கடமைகளை முன்னெடுக்க வேண்...
|
|