வெளிநாட்டு முதலீடுகள் 300 சதவீதத்தால் அதிகரிப்பு – பிரதமர்

Friday, September 1st, 2017

நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதால் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மாணிக்கல் மற்றும் ஆபரணங்கள்  “FACETS Sri Lanka 2017” கண்காட்சியை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த கணகாட்சி நேற்ற ஆரம்பமானது.கண்காட்சி இமமாதம் 3 ஆம் திகதி வரை நடைபெறும.;  பிரதமர் ரணில் விக்ரமசிங்க  அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 2014ஆம்ஆண்டுடன்ஒப்பிடும்போது இது 300 சதவீத அதிகரிப்பாகும். முhணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தித்துறையில் நாட்டின் வருமானமும் அதிகரிக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

Related posts: