கடந்த ஆண்டு அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 4% பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தகவல்!

Monday, September 18th, 2023

2022 ஆம் ஆண்டிற்கான அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 4% பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவை ஆட்பதிவு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட அடையாள அட்டைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தவறான அடையாள அட்டைகள் PVC மற்றும் பாலிகார்பனேட் கார்டுகளில் அச்சிடப்பட்டிருந்தன.

இந்த இரண்டு வகையான அட்டைகளிலும் அச்சிடப்பட்ட குறைபாடுள்ள அடையாள அட்டைகளின் எண்ணிக்கையை தனித்தனியாக சமர்ப்பிக்க திணைக்களம் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பழுதடைந்த அடையாள அட்டைகள் தொடர்பான செலவை கணக்கிடுவதற்கான தணிக்கைக்கு தகவல் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: