2022 நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை 2023 பெப்ரவரியில் நடத்த தீர்மானம் – கல்வியமைச்சர் சுசில் அறிவிப்பு!

Monday, June 20th, 2022

2022 ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும் கல்வியமைச்சர்  தெரிவித்தார்.

இதேநேரம் சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நிலையங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: