வெளிநாட்டில் இருந்து க.பொ.த பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதி?

Wednesday, June 12th, 2019

வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களது பிள்ளைகள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை அவர்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து எழுதுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி அவர்கள் வசிக்கின்ற நாடுகளில் உள்ள இலங்கையின் ராஜதந்திர அலுவலகத்தில் இந்த பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள தாம் அறிவுறுத்தி இருப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். அதற்கு எந்த வகையிலும...
தபால்மூல வாக்கெடுப்புக்கு வாக்குச்சீட்டுக்களை ஒப்படைப்பது தாமதமடையலாம் - அரச அச்சக திணைக்களம் தெரிவி...
எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளது - எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் ...