வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!
Wednesday, August 29th, 2018வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
பொலிஸாருடன் நேற்று(28) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததையடுத்து, இன்று(29) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை வனஜீவராசிகள் சங்கத்தின் தலைவர் இந்திக வசந்த பீரிஸ் குறிப்பிட்டார்.
மின்னேரியா தேசிய பூங்காவில் பணிபுரியும் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறு கோரியே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபரணை பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன்பின்னர், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
27,000 அன்னாசிப் பழக் கன்றுகளை பயனாளிகளுக்கு விநியோகிக்க தீர்மானம்!
31 ஆம் திகதி நள்ளிரவுவரை அனைத்து விமான சேவைகளும் இரத்து - சிவில் விமான சேவைகள் அதிகார சபை!
வடக்கில் இதுவரை 11 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – 164 பேர் மரணம் என சுகாதார சேவைகள் பணிப்...
|
|