வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் !
Wednesday, March 21st, 2018
இலங்கையில் தற்போது அமைதி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு வருமாறு வெளிநாட்டவர்களிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் துரதிஷ்டவசமாககண்டியில் வன்முறை சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
எனினும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு வெளிநாட்டவர்கள்வருகைத்தர முடியும்.
மேலும் கண்டி சம்பவத்தினால் சுற்றுலா துறையினுள் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது எனினும் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.இனியும் ஏற்படாது எனவும், நாடு பாதுகாப்பாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் மாநகரசபை பெண் அதிகாரி நிதி மோசடி: மூடிமறைக்க மாநகரசபை அதிகாரிகள் முயற்சி!
மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
தகைமை பாராது சேவைக்கால அடிப்படையில் நியமனம் வழங்குங்கள் - வவுனியாவில் சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்ட...
|
|