வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையருக்கு ஓய்வுதியம்!
Saturday, November 5th, 2016
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களுக்கான ஓய்வுதியத்திட்டம் ஒன்றை அடுத்த வருடம் அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தபோது;
ஜனாதிபதித் தேர்தலின் போது ஜக்கிய தேசியக் கட்சியும், ஜனாதிபதியும் கூட்டாக வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான மூன்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. வெளிநாட்டு பணியாளர்களின் குடும்பங்களுக்கான நலன்புரித் திட்டம், ஓய்வுதியத் திட்டம் மற்றும் பணியாளர்கள் அந்த நாடுகளில் ஆரம்பிக்கும் வங்கிக் கணக்குகளுக்கு 2.5வீத வட்டியை வழங்குவது ஆகியன அந்த மூன்று வாக்குறுதிகளாகும். இவர்களுக்கான ஓய்வுதியத் திட்டத்தை ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவம் கூறினார்.

Related posts:
நிரந்தர வீடுகளை பெற்றுக்கொள்ள உதவுமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை பூம்புகார் பகுதி மக்கள் கோ...
11 நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் - வெளியானது விசேட வர்த்தமானி!
VAT வரி அதிகரிப்பு - ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன - பேக்கரி உ...
|
|
|


