விமான நிலையம் திறக்கப்படும் திகதியில் மீண்டும் தாமதம் – விமான நிலையம் மற்றும் சேவையின் உப தலைவர்!
Sunday, July 12th, 2020கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என விமான நிலையம் மற்றும் சேவையின் உப தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விமான நிலையத்தை திறக்கப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. எனினும் பின்னர் திறக்கப்படும் திகதி ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் நாட்டில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதனை கருத்திற் கொண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி பின்னர் விமான நிலையத்தினை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் திறக்கப்படும் உரிய திகதியை இன்னமும் அறிவிக்க முடியாத நிலை காணப்பட்டுள்ளதாகவும் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையும் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 858 பெண்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!
ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம் - ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க அறிவி...
பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை 'வலுவான அர்ப்பணிப்பை' காட்டி வருகின்றது - சர்வதே...
|
|
ஏற்றத் தாழ்வுகளற்ற எதிர்காலத்தை உருவாக்குவதே ஈ.பி.டி.பியின் நோக்கமாகும் - யாழ் மாவட்ட நிர்வாக பொறு...
தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலி...
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகா...