இன்றுமுதல் நடைமுறைக்கு வரகின்றது புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின் விதிகள்!
Friday, September 15th, 2023இலங்கையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின் விதிகள் இன்று (15.09) முதல் அமுல்படுத்தப்பட உள்ளன.
இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதன்படி இன்றுமுதல் இந்த சட்டம் தொடர்பான விதிகள் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு மசோதா கடந்த ஜூலை 19 ஆம் திதகி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்!
ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைவடையும் - இலங்கை மின்சார சபையின் தலை...
சர்வதேச நாணய நிதியத்தினால் இம்முறை வழங்கப்பட்ட கடன் ஏற்கனவே கிடைத்த கடன்களை போன்றதல்ல - மத்திய வங்கி...
|
|