வாக்களிப்பதற்கு வரும்போது பேனையுடன் வாருங்கள் – மஹிந்த தேசப்பிரிய ஆலோசனை!
Saturday, June 6th, 2020வாக்களிப்பதற்கு வரும்போது, வீட்டிலிருந்து பேனையை எடுத்துவதற்கு அனுமதியளிப்பது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் வாக்களிப்பதற்கு கறுப்பு அல்லது நீல நிறத்திலான போல் பொயின்ட் பேனாக்களை மட்டுமே எடுத்துவருமாறு தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கறுப்பு அல்லது நீல நிறத்திலான போல்ட் பொயின்ட் பேனைக்களை வாக்காளர்கள் பயன்படுத்த முடியும் எனினும், ஜெல் பேனையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அறிவிப்பொன்று விடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழைவோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும் என்பதுடன், கைகளை நன்றாக கழுவவும் வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ். பல்கலை சம்பவத்தை தெற்கு இனவாதிகள் தூக்கிபிடிப்பது கவலையளிக்கின்றது - இராஜாங்க அமைச்சர் டிலான...
நாடாளுமன்றத்தில் உறங்கும் எம்.பி.க்களுக்குச் சிறப்பு இனிப்பு!
கடும் வறட்சியினால் வட,க்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 583 பேர் பாதிப்பு - அனர்த்த மு...
|
|