வாகனம் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!

Sunday, December 24th, 2017

இலங்கையில் வாகனங்களுக்கு வழங்கப்படும் இலக்கத் தகடுகளில் மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய வசதியை அடுத்த வருடம் தொடக்கம் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் ஜகத் சந்திரசிறிதெரிவித்துள்ளார்.

மேலும் 2018 ஆம் ஆண்டுடன் வாகனங்களுக்கான இலக்கங்களை அச்சிடும் நிறுவனங்களின் ஒப்பந்த காலம் முடிவடைகிறது. புதிதாககேள்விப்பத்திரங்களை கோரும்போது புதிய வசதிகளுடன் கூடிய இலக்கத் தகடு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. புதிய இலக்க தகடுக்காகRFD தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என ஆணையாளர் கூறினார்

Related posts: