குப்பை பிரச்சினைக்கு தீர்வு – பிரதமர்

Friday, July 21st, 2017

நாட்டில் நிலவிய குப்பை பிரச்சினைக்கு இரண்டு மாதம் என்ற குறுகிய காலப்பகுதியில் நெடுங்கால தீர்வு பெற்று கொடுக்க முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்குப்பை தொடர்பான பிரச்சினைக்கு கடந்த காலங்களில் தீர்வு முன்வைக்கப்படவில்லை

எனினும் தற்போதைய அரசாங்கம் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முக்கியத்துவம் வழங்குகின்றது.இதனடிப்படையில் குப்பை முகாமைத்துவத்துக்காக பெருநகர் அபிவிருத்தி அமைச்சினால் புத்தளத்தில் நிரந்தரமான இடம் அடையாளங்காணப்பட்டுள்ளது.

தற்போது குறுங்கால அடிப்படையிலான தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts:

சுற்றுலாப் பயணிகளை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சப...
சலுகை அடிப்படையில் இலங்கையின் எரிபொருள் தேவையை நிறைவு செய்ய ஐக்கிய அரபு இராச்சியத்துடன் அமைச்சர் பீர...
நாட்டின் பொருளாதார நெருக்கடியினை சீர் செய்ய இந்திய - இலங்கை அமைச்சர்களுக்கு இடையே அடுத்தவாரம் சந்திப...