வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் இலக்குடன் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 12 ஆம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

Monday, November 8th, 2021

விசேட நாடாளுமன்ற அமர்வுகள் இன்றையதினம் கூடியதுடன் இன்று தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம், நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை சமர்பிக்கப்படவுள்ளது.

பசில் ராஜபக்ஷ, நிதியமைச்சராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு – செலவுத்திட்டம் இதுவாகும்.

இயன்றவரை வினைத்திறனுடன் காணி வளங்களை பயன்படுத்துதல், இயன்றவர்களையும் விரும்பாதவர்களையும் வெல்வது, உற்பத்திப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவது போன்றவற்றில் இந்த வரவு – செலவுத் திட்டம் கவனம் செலுத்துமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட்டதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது வரவு – செலவுத்திட்டம் இதுவென்பதுடன், நாட்டின் 76 ஆவது வரவு – செலவுத் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை வரவு-செலவுத் திட்டம் தயாரிப்பின்போது, நூற்றுக்கும் மேற்பட்டோரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. நிதியமைச்சின் வேலைத்திட்டத்துக்கு அமைவாக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அபிப்பிராயங்களும் இதற்குப் பெறப்பட்டுள்ளன என்றும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரத்துக்குகு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, கொரோனா சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என நிதியமைச்சு மை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: