வீட்டில் இருந்து பணி புரிவதற்கான சுற்றறிக்கை – அரசாங்கம்!
Thursday, March 19th, 2020நாளைமுதல் 6 நாட்கள் வீட்டில் இருந்து பணி புரியும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளைமுதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரியும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வீட்டில் இருந்து பணி புரியும் வாரமானது விடுமுறை தினம் இல்லை எனவும் அரச மற்றும் தனியார் துறை பிரதானிகளின் அறிவுரைக்கு அமைய முடிந்தளவு வீட்டில் இருந்தவாறு வேலை செய்யுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதாரம், வங்கி, போக்குவரத்து மற்றும் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கு இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரிய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறை தொடர்பில் அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
Related posts:
இலங்கையில் ஆய்வுகளை மேற்கொள்ளும் கடல்சார் ஆராட்சிக் கப்பல்!
சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் பொதுமககள் அலட்சியம் – கொரோனா மீண்டும் பரவலாம் என அரசமருத்துவ அதிகா...
பிரான்ஸுக்கான நேரடி விமான சேவைகளை மீண்டும் முன்னெடுக்கிறது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!
|
|