தரச் சான்றிதழ் அற்ற மருந்து வகைகள் தொடர்பில் விசாரணை வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Sunday, June 23rd, 2019

உலக சுகாதார தாபனத்தின் தரச் சான்றிதழ் அற்ற மருந்து வகைகளை நாட்டுக்கு கொண்டு வந்த நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்றமை சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உலக சுகாதார தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் உலக சுகாதார தாபனத்தின் இலங்கை கிளையில் முறைப்பாட்டு மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனைக் கூறினார்.

முறைப்பாட்டு மனுவை வழங்கிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இவ்வாறு கூறினார்.

Related posts: