வலிகாமம் தெற்கு கலாஜோதி சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!
Thursday, September 12th, 2019வலிகாமம் தெற்கு பிரதேசத்தி பொது அமைப்புகள் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு கொடுக்கும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் ஒருதொகுதி கதரைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இணுவில் கிழக்கு கலாஜோதி சனசமூக நிலைகத்தின் நிர்வாகத்தினர் தமது தேவைப்பாடுகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் தெற்கு நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
குறித்த தேவைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்திய கட்சியின் வலிகாமம் தெற்கு நிர்வாகத்தினர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு குறித்த அமைப்பினரின் தேவைப்பாடுகள் தொடர்பில் கொண்டுசென்றதன் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பிரகாரம் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 59 கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த உதவித் திட்டங்களை கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாக செயலாளர் வலன்ரயன், கட்சியின் வலிகாமம் பிரதேச உதவி நிர்வாக செயலாளர் அரிகரன் ஆகியோர் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|