விரைவில் மயிலிட்டி துறைமுகம் மக்கள் பாவனைக்கு விடப்படும் – மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க!
Thursday, September 8th, 2016
மயிலிட்டி துறைமுகம் விரைவில் மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்படும் என யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலயார் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்று பரம்பரை அங்கத்தவர்கள் மயிலிட்டி துறைமுகத்தில் படகை தரித்து வைத்திருந்தனர். இந்த நிலையில் தற்கால இளைஞர்களும் அங்கே சென்று மீன்பிடியில் ஈடுபட எதிர்பார்க்கின்றனர். எனினும் மீன்கள் குவியும் இடத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க முயற்சிப்பதில்லை, இதனால் தான் மயிலிட்டியை அண்மித்த பகுதிகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகமாக காணப்படுகின்றது.
இதேவேளை படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள மயிலிட்டி துறைமுகம் மக்கள் பாவனைக்கு விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|