இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு உறுதி – நியூசிலாந்து!

Wednesday, December 4th, 2019


இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும்  நியூசிலாந்து முதலான நாடுகள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

ஜனாதிபதியுடன் சுமூகமாக கலந்துரையாடிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி எதிர்காலத்தில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக உறுதியளித்துள்ளார்.

இதேநேரம் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோன்னா கேம்பர்ஸ் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று  பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து, தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி, பரஸ்பர நன்மைகளை அதிகரிப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக இதன்போது அவர்கள் உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: