வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரண்ணாகொட நியமனம்!
Thursday, December 9th, 2021வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படை முன்னாள் தளபதி, அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதிய ஆளுநர் தமது நியமன கடிதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரித்துள்ளது.
வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்துவந்த ராஜா கொல்லுரே கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
இதனையடுத்து, ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்காக ஓய்வுபெற்ற கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொட நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்திய மருத்துவர்களை அழைக்க அரசு!
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரைக் காணவில்லை!
மூன்று பெண்கள் உட்பட 37 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று பதவியேற்ப...
|
|