கொரோனா : இலங்கையில் 4வது நபர் மரணம்!
Friday, April 3rd, 2020இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது வரையில், 962,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையிலும், 151 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உதவிகளை வழங்கத் தயார் - அந்தோனியோ குட்டரஸ்!
உற்பத்திதுறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் - யாழ்ப்பாண வணிக கழகம் தெரிவிப்பு!
கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் ஊழல் மோசடிகள் தொடர்ச்சியாக அம்பலம் - இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர்...
|
|