வடக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு – வடக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவு கிடைக்கும் என உறுதி!
Thursday, October 5th, 2023வட மாகாண ஆளுநர் திருமதி.பி. எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் அக்டோபர் 03 ஆம் தேதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களை கொழும்பில் அமைந்துள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். .
குறித்த சந்திப்பின் போது ஆளுநர் வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பாக விளக்கி கூறியுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்தள்ளது.
அதேவேளையில் இந்திய அரசாங்கம் கடந்த காலங்களில் வழங்கிய ஆதரவிற்கு தமது நன்றியினையும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வடக்கின் அபிவிருத்திக்கும் தங்களது தொடர்ச்சியான ஆதரவு உறுதி என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க 15ஆம் திகதி இறுதிநாள்!
யாழ்ப்பாணத்தில் பலத்த மழை!
பருத்தித்துறை - கச்சாய் பிரதான வீதியில் தாழிறங்கியது பாலம் – பயணிகள் அச்சம்!
|
|