க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு!
Wednesday, December 12th, 2018இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பரீட்சை மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் எவரேனும் அமைதியற்ற வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனை கண்காணிப்பதற்காக நடமாடும் காவற்துறையினர் சேவையில் ஈடுபடவுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்தமுறை 4661 மத்திய நிலையங்களில் இடம்பெற்ற பரீட்சைகளுக்காக 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
Related posts:
சூழலின் தரம் குறித்து அவதானம் வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்!
உயிர்த்த ஞாயிறு நினைவேந்தல்கள் இரத்து - கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் வலுக்கட்டாயமாக ரூபாவாக மாற்றப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்குப...
|
|