சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றும் அதிகாரம் இருக்கும் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவிப்பு!

Sunday, October 29th, 2023

முன்மொழியப்பட்டுள்ள சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு (IPSA) கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றும் அதிகாரம் இருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு புதிய நாடாளுமன்ற தரநிலைகள் யோசனையின் கீழ் அமைக்கப்படும், இந்த நிலையில், சட்டமூலத்தின் பூர்வாங்க வரைவு தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் முன்வைத்த கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் சட்டமூலத்தின் ஆரம்ப வரைவு தயாரிக்கப்பட்டதுடன் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படுவதை உத்தேச சட்டம் உறுதி செய்யும் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள யோசனையின் முக்கிய நோக்கங்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பகத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தொழில்முறை ஆகியவற்றை உறுதி செய்வதாகவும், அதன் மூலம் நாடாளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதாகவும் இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தேவைகளை பூர்த்தி செய்துதந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியினருக்கு மனமார்ந்த நன்றிகள் :  கோண்டாவில் மேற்கு ம...
கூட்டுறவின் பரிணமிப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் திரட்டும் நடவடிக்கை முன்னெடுப்...
நகர்ப்புறங்களில் மாத்திரமின்றி கிராமப்புறங்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டு...