அலைந்து திரியும் நாய்களால் தோல் வியாதி பரவும் அபாயம்!

Monday, February 13th, 2017

வடமராட்சி பகுதிகளில் அலைந்து திரியும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் எற்படக்கூடும் என பொதுமக்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மகிந்த சிந்தனை அடிப்படையில் தெரு நாய்களை அழிப்பது தடைசெய்யப்பட்டது இதனால் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்துக் காணப்பட்டது தற்போது தெருநாய்கள் பெருக்கம் அடைந்து அந் நாய்கள் குட்டைபிடித்து காணப்படுகின்றன. இதனால் நாய்களின் குட்டைகள் மனிதர்களுக்கு தொற்றக்கூடிய வாய்ப்பு இருப்பதனால் அலைந்து திரியும் நாய்களை பிரதேச சபை, நகரசபைகளும் சுகாதாரப் பகுதியினரும் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர்.

1456998712-2158

Related posts: