வடக்கு கிழக்கின் ஹர்த்தால் அனுஷ்டிப்பு நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக அமையவில்லை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, September 29th, 2020

நாட்டில் எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் பல்வேறு கேள்விகளைத் தொடுத்திருந்தனர்.

இதன்போது, வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச – நாட்டின் பாதுகாப்பு எவ்வகையிலும் இது அச்சுறுத்தலாக அமையவில்லை என்று குறிப்பிட்ட அவர், எமது நாடு முழுமையான பாதுகாப்பின் கீழ் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் எந்தவிதமான வன்முறைகளுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ இடமில்லை என்று குறிப்பிட்ட அவர், முழுமையான பாதுகாப்பு விடயத்தை தாங்கள் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே புதிய அரசியலமைப்பு கொண்டு வந்தால் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படலாம் என்று குறிப்பிட்ட பிரதமர், 20 ஆவது திருத்தச் சட்டம் திருத்தங்களுடன் வருவதனால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

எனினும், அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றங்களைக் கொண்டுவர மக்களின் முழுமையான ஆணை கிடைத்திருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர், முழுமையான புதிய அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரும் பட்சத்தில் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: