நாட்டில் தனிநபர் வருமான வரிக் கோப்புகள் 5 இலட்சம் காணப்பட்டாலும் அவற்றில் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர் – வெளியான முக்கிய தகவல்!

Thursday, July 13th, 2023

நாட்டில் தனிநபர் வருமான வரிக் கோப்புகள் 5 இலட்சம் காணப்பட்டாலும் அவற்றில் 31,000 பேரே வரி செலுத்துவதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் 105,000 பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த நிறுவனங்களிலிருந்து 82% வரி வருமானம் 328 நிறுவனங்களிலிருந்தே கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் வழங்கும் போது அடைந்திருக்க வேண்டிய விடயங்களான நாட்டின் பணவீக்கம், நாட்டின் கையிருப்பு அளவு மற்றும் அரசாங்க வருமானம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு இடம்பெறும் டிசம்பர் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது முக்கியமானது என குழுவின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.

அதனால் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு இலங்கை சுங்கத் திணைக்களம், மது வரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என்பவற்றுடன் தனது குழு தொடர்ந்தும் கலந்துரையாடல் மேற்கொண்டு அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தலைவர் குறிப்பிட்டார்.

தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: