வீரியமடையும் கொரோனா அபாயம் : நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்!
Thursday, April 9th, 2020அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றின் நிலைமை தீவிரமடையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையையடுத்து நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து அமுலில் வைத்திருக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது.
இதன்படி குறிப்பிட்டளவு கால அவகாசம் இடையிடையில் மக்களுக்கு வழங்கி ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து அமுலில் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
இதேவேளை, நோய் பரவலைத் தடுக்கும் வகையில் தம்புள்ளை பொருளாதார நிலையம் உட்படப் பல நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அதிக விலைக்குப் பொருட்களை விற்போர் தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தில் முறையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
திரைப்பட கதாசிரியர் பஞ்சு அருணாசலம் காலமானார்!
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு STF பாதுகாப்பு - பொலிஸ்மா அதிபர்!
யாழ். குடாவில் அதிகரிக்கிறது டெங்கு : நேற்று முன்தினம் வரை 422 பேர் பாதிப்பு!
|
|