தோழர் அன்பு அவர்களின் தாயாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!

Wednesday, January 23rd, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் வடக்கு நிர்வாக செயலாளரும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான இராசரத்தினம் ஜெயபாலசிங்கம் (அன்பு) அவர்களின் தாயார் அமரர் இராசரத்தினம் இராசமணி அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முக்கியஸ்தர்கள்  மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர்.

வயது முதுமை காரணமாக இன்றையதினம் காலமான அமரர் இராசரத்தினம் இராசமணி அவர்களது பங்களா லேன், மல்லாகம் என்னும் முகவரியிலுள்ள இல்லத்திற்கு சென்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரது பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

viber image1

 

Related posts: