கோரிக்கை விடுத்தால் பேருந்து சேவை வழங்கப்படும் – இலங்கை போக்குவரத்து சபையின் உதவிப் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Thursday, May 13th, 2021

நாடுமுழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக இன்று வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் வரும் மே 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பேருந்து சேவைகள் நடைபெறாது என இலங்கை போக்குவரத்து சபையின் உதவிப் பொது முகாமையாளர் தவானா பாண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –

நாளை ஒரு விடுமுறை நாளாக இருக்கும் என்றும், பயணம் தடை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து தேவையில்லை. எனவேதான குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், அத்தியாவசிய கடமைகளைச் செய்ய வரும் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் கோரிக்கை விடுத்தால், அவர்களுக்கு பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன !
ஜனாதிபதி - அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இடையே நாளை சந்திப்ப...
சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள...