சிறைக் கைதிகளை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவது நிறுத்தம் – சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, July 14th, 2020

சிறைக் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அச்ச நிலைமை உருவாகியுள்ளதன் காரணமாக நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விளக்கமறியல் கைதிகளுக்கான அடுத்த வழக்கு திகதியை தீர்மானித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் காணொளி தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: