ஆண்டில் இதுவரையான காலத்தில் 198,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்!
Monday, November 20th, 2023இந்த ஆண்டில் இதுவரை 198,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, 18 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 16 மில்லியன் மக்கள் வரி செலுத்துபவர்களாக உள்ளனர்.
தற்போது சுமார் 13000 நிறுவனங்கள் VAT எனப்படும் பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வௌிக்கொணரப்பட்டுள்ளது.
அவர்களில் பலரும் வரி ஏய்ப்பு செய்வதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதற்கு முன்னர் RAMIS எனும் வருமான நிர்வாக முறையைப் பயன்படுத்தி வரி வசூலை ஒழுங்குபடுத்துவதற்கு தீர்மானித்திருந்தது.
எனினும் அந்த முறையில் சிக்கல்கள் இருப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் கோப் குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
59 பொலிஸார் அதிரடியாக பணிமாற்றம்!
கிழக்கு மாகாண ஆளுநரால் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மாங்கன்றுகள் விநியோகம்!
2040 ஆம் ஆண்டிற்குள் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை 60% குறைக்க வேண்டும் – சமூக ஆர்வல;கள்...
|
|