புலிகள் தொடர்பிலான சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021

புலிகளை ஆதரித்துப் பேசினாலோ அல்லது புலிகளின் நினைவு தினங்களை அனுஷ்டித்தாலோ அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக பொதுமக்கள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாடாளுமன்றத்தில் புலிகள் குறித்து பேசினால் அவர்களின் எம்.பி. பதவியைக் கூட இரத்துச் செய்யும் விதத்தில் நடவடிக்கை எடுக்கவும் ஆராயப்படுவதாக தெரிவித்துள்ளார்..

ஜேர்மனியில் எவ்வாறு நாஸி கட்சி பற்றியோ, ஹிட்லர் பற்றியோ பேசினால் அங்கு எவ்வாறு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதோ அதேபோன்று இலங்கையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஏனென்றால் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டாலும் கூட அவர்களின் கொள்கை இன்னமும் அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

புலிகளின் பிரதிநிதிகள் இன்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனவே, இவற்றைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: