மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் அச்சுவேலி தனியார் பேருந்து சேவை விஸ்தரிக்கப்படவுள்ளது!
Friday, September 1st, 2017
யாழ்ப்பாணம் அச்சுவேலி தனியார் பேருந்து சேவை நாளை மறுதினம் சனிக்கிழமை முதல் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாக வலி.கிழக்குத் தனியார் சிற்றூர்திச் சேவைகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த யுத்தகாலத்திற்கு முன்னர் வலி. கிழக்குப் பகுதிகளூடாகவும் சிற்றூர் சேவைகளானது இடம்பெற்று வந்தது. எனினும், பின்னர் அப் பகுதிகள் உயர் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் அப் பகுதிக்கான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே தற்போது அப் பகுதிக்கான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வலி கிழக்குத் தனியார் சிற்றூர்திச் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வீதி தற்காலிகமாக மூடப்படும் - ரயில்வே திணைக்களம் !
இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
விமானங்கள் தரையிறங்கும் கட்டணம் குறைப்பு - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் அறிவிப்பு!
|
|
|


