வடக்கு எம்.பிக்கள் எண்ணிக்கை மாற்றமில்லை!
Thursday, December 7th, 2017
2017 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வடக்கின் 5 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பைத் தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மாத்தறை மாவட்டத்தில் 8 உறுப்பினர்கள் நாடாளுமன்றுக்குத் தெரிவாகும் நிலையில் இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் அந்த எண்ணிக்கை 7 ஆகக் குறைவடைந்துள்ளது.
அந்த ஒரு உறுப்பினருக்கான ஆசனம் மொனராகலை மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளது. இதுவரை 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு வந்த மொனராகலை மாவட்டத்தின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
50 வீதத்தால் நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு !
பெற்றோருக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு!
கொவிட் 19 நோயாளர்களை அடையாளம் காண பீ.சீ.ஆர். முறைமையே சிறந்தது - அரச இரசாயன பகுப்பாய்வு சேவைகள் பிரத...
|
|