வடக்கில் 62 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Friday, June 18th, 2021

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 41 பேர் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 599 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 44 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்,

அவற்றில்  யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்தில் 09 பேருக்குத் தொற்று கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், வவுனியா மாவட்டத்தில் 06 பேருக்குத் தொற்று வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 பேருக்குத் தொற்று முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் 02 பேருக்குத் தொற்று மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர் ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்.பல்கலைக்கழக ஆய்கூடத்தில் 118 பேருக் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 18 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில்,

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர் (10 மாத பெண் குழந்தையும், 07 வயது சிறுவனும் உள்ளடக்கம்) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 08 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts: