வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு: நோயாளர்கள் பெரும் அவதி!

Wednesday, September 18th, 2019

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளதனால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை 24 மணித்தியாலயங்கள் பணிபகிஷ்கரிப்பில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிப்புறக்கணிப்பு சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று காலை சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக அங்கு சிகிச்சைக்காக சென்ற பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் ஏமாறத்துடன் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை சில வைத்தியசாலைகளில் மாத்திரம் வைத்திய சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டுள்லதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: